என்னை யாரெனக் கண்டு கொள்ள விழையும் உங்கள் ப்ரயத்தனங்களைக் கண்டு வியந்தபடி இருக்கிறேன்.
என் பார்வைகளைப்பற்றியபடி என் மனத்துள் புகுந்து கொள்வதற்கான
ஆயத்தங்களைக் கண்டும் காணாதபடி இருக்கிறேன்.
நடுச்சாமத்தில் என் விரல் ஒற்றும் வரிகளில் நீங்கள் என்னைக் கண்டடைய முயலுகையில்
குழல் விளக்கினொளியில்
அயர்ந்துறங்குகின்றேன்.
உங்கள் மனதிலாடும் என் பிம்பத்தை
கால் வலிக்க நடை பயின்று
வெளியேற்ற முயல்கிறீர்கள்.
இவ்வரிகளுக்கப்பாலும் துலங்கும் சுயத்தை மறைத்தபடி சிரிக்கத்துவங்குகிறேன்
No comments:
Post a Comment